search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
    X

    புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

    • புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • பெரம்பலூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை பாசன வாய்க்கால்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளைவாய்க்கால் எண்கள் 25,26,27 ஆகியவற்றிற்காக நில கையகயெடுப்பு அறிவிப்பானை செய்திதாள் மூலம் அறிந்தோம்.

    மூன்று கிளைவாய்க்கால்களும் சுமார் 4 கி.மீ நீலத்திற்கு அமைத்து அதற்காக சுமார் 600 ஏர்ஸ் பாசன நிலம் கையகப்படுத்த உள்ளனர், ஆனால் இந்த வாய்க்கால்கள் அமைய உள்ள வழித்தடங்களில் 100 ஏர்ஸ் நிலங்கள் கூட தரிசு மற்றும் மானவாரி நிலங்கலாக இல்லை. இந்தநிலையில் 3 வாய்க்கால்கள் அமைக்க பட்டால் கிராம பொது மக்களாகிய நாங்கள் மிகபெரிய துன்பங்களையும் துயரங்களையும் வாழ்வாதாரங்களையும் அனுபவிக்க நேரிடும்.எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்தின் வழியாக அமைய உத்தேசித்துள்ள கள ஆய்வு செய்து கிளை வாய்க்கால்கள் அமைக்கும் முயற்சியை கைவிட கோகிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


    Next Story
    ×