என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கிணற்றில் குளித்தவர் சாவு
- தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்டனர்
- கிணற்றில் குளித்தவர் உயிரிழந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி காந்தி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் முருகேசன் (வயது 23). இவரும், அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்களான மருதையின் மகன் சாமிநாதன் (25), தொப்புளானின் மகன் விக்னேஷ் (23) ஆகிய 3 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் குளிப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றனர். அப்போது முருகேசன் அவரது சட்டை, லுங்கி, காலணி ஆகியவற்றை கழற்றி வைத்து விட்டு கிணற்றில் குளித்தார். பின்னர் கிணற்றில் இருந்து அவர் மேலே வரவில்லை.இந்த நிலையில் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சாமிநாதனும், விக்னேசும் இதுகுறித்து ஊருக்குள் சென்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, கிணற்றில் இருந்து முருகேசனை பிணமாக மீட்டனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்