search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
    X

    ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்

    • பெரம்பலூரில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், சுந்தரபாண்டியன், அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராமர், செந்தில்குமார், அக்ரி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    தேர்தல் காலத்திலும், ஜாக்டோ-ஜியோ மாநாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 25-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், வரும் டிசம்பர் 28-ந்தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்திலும் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 75 பெண்கள் உட்பட 200 கலந்துகொண்டனர்.

    Next Story
    ×