search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
    • கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது.இத்திருக்கோயில் ஜுர்ணோ தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 21-ம் தேதி வாஸ்து பூஜை, நவக்கிரக பூஜையோடு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து எட்டுத்திக்கு பூஜை, புற்றாங்கண் மண் எடுத்தல், பிரவேசபலி, கோ பூஜை, நாடி சந்தானம் பூஜை களோடு நான்கு கால யாக வேள்வியோடு, மஹா பூர்ணாஹுதியும் தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க யாக சாலையிலிருந்து குடங்கள் புறப்பாடடோடு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தொடர்ந்து லஷ்மி பூஜை மகா ஹோமத்தோடு காமாட்சி உடனுறை கைலாச நாதர் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவில் வயலப்பாடி, வேப்பூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்

    Next Story
    ×