என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் கல்யாண் நகர் ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
- பெரம்பலூர் கல்யாண் நகர் ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறையூர் சாலை கல்யாண் நகரில் புதிதாக ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவையொட்டி நேற்றுமுன்தினம் (26ம்தேதி) காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை துவங்கியது. இதை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது.அதை தொடர்ந்து காலை விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து யாத்ரா தானம், கடம்புறம்பாடு நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு விமான மகாகும்பாபிஷேகமும், காலை 10.10 மணிக்கு ஸ்ரீசித்தி விநாயகர் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்திவைத்தனர்.விழாவில் ஒபிஎஸ் அணி அதிமுக மாவ ட்ட செயலாளரும், முன்னா ள் எம்எல்ஏவான ராமச்ச ந்திரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பேபிகா மராஜ், திருமால் நிறுவ னங்களின் இயக்குனர் கோகுல், கல்யாண் நகர் நற்பணி மன்ற தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்