search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பலூரில் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    குரும்பலூரில் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • குரும்பலூரில் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் யானை, சிம்மம், ரிஷப வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்தார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், அக்னி மிதித்தல், பொங்கல் வழிபாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி, கே.புதூர், மேட்டாங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் பிரதான நான்கு வீதிகளின் வழியே இழுத்து வரப்பட்டு நேற்று மாலை நிலையை அடைந்தது. அதனைத்தொடர்ந்து பிராய்சித்த வழிபாடு நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை குரும்பலூர் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் கிராம கரைக்காரர்கள் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராடுதல், விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    Next Story
    ×