என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அகரம்சீகூர் அருகே பரிதாபம்-தாத்தா வீட்டுக்கு சென்று மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு
- தாத்தா வீட்டுக்கு சென்று மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்த வடக்கு மாதவி ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சத்யா. இந்த தம்ப–தியினரின் மகன் சுதர்சன் (வயது 5). கோவிந்தராஜ் சென்னை–யில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்யா தனது மகன் சுதர்சனுடன் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அனுக் கூர்குடிக்காடு காட்டுக் கொட்டகையில் வசித்து வரும் தனது தந்தை வீட்டுக்கு மகனுடன் சென்றிருநதார். இதற்கிடையே நேற்று காலை 10 மணியளவில் வீட்டு முன்பு விளையா–டிக்கொண்டு இருந்த சுதர்சனை திடீரென்று காண–வில்லை.
இதனால் பதட்டம் அடைந்த அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அனுக் கூர்குடிக்காடு காட்டுப் பகுதியில் உள்ள பாசன கிணற்றின் அருகே சுதர்ச–னின் செருப்பு மற்றும் பொம்மைகள் கிடந்தன. இதனைக் கண்ட அப்பகு–தியினர் உடனடியாக அவ–னது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிறுவனின் தாய் மகன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்புத் துறையி–னருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் சுதர்சனின் உடல் மீட்கப்பட்டது. இதை பார்த்ததும் அவர் தாய் உள்ளிட்டோர் கதறி அழுதனர். இதனையடுத்து சுதர்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்ப–லூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. சம்பவம் குறித்து மங்கள–மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப–டுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்