என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திரக் கலை விழா நிறைவு நாள் கொண்டாட்டம்
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திரக் கலை விழா நிறைவு நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
- நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங் களின் சார்பாக நட்சத்தி–ரக்கலை விழா 3 நாட்கள் கோலாகமாக நடைபெற்றது. இதில் விழாவின் 3-ம் மற்றும் நிறைவு நாள் கொண்டாட்டம் நேற்று சினிமா பிரபலங்களுடன் நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நட்சத்திரக்கலை விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கினார். விழா–வானது பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கரகாட்ட கலையோடு துவங்கப்பட் டது. செயலா–ளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்த–லட்சுமி கதிரவன், இயக்கு–நர் மணி, ராஜபூபதி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர்.
விழாவில் திரைப்பட பிரபலங்களான நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அருண் விஜய், நடன இயகுனர் ராபர்ட், பாடகர்கள் கானா சுதாகர், பூவையார், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மணிமேகலை, அசார் ஆகியோர் கலந்துகொண்டு 20-க்கும் மேற்பட்ட பாடல் கள் பாடி, ஆடி மகிழ் வித்த–னர்.
நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அருண் விஜய் ஆகியோர் மாணவ, மாண–வி–களுடன் நடனம் ஆடி–யும், கலந்துரையாடியும் விழாவை சிறப்பித்தனர். பெரம்பலூர் சுற்று வட் டார பகுதியின் பொது–மக்கள் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழு–மத்தைச் சேர்ந்த பொறி–யியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள், நர்சிங் கல் லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், துணை மருத் துவ அறிவியல் கல்லூரி–கள், தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உடற்கல்வி–யியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாண–விகள் ஆடிப்பாடி மகிழந்த–னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்