search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே நொச்சியம் பூவாடையம்மன் கோவில் தேரோட்டம்
    X

    பெரம்பலூர் அருகே நொச்சியம் பூவாடையம்மன் கோவில் தேரோட்டம்

    • பெரம்பலூர் அருகே நொச்சியம் பூவாடையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் பூவாடையம்மன், வேம்படியான், முத்துசாமி ஆகிய உற்சவ சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் மதியம் 12 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. மஞ்சள் நீராட்டு தேரினை திரளான பக்தர்கள் தப்பாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கை முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு மற்றும் சுவாமி குடிவிடுதலுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×