search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
    X

    பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

    • பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யபட்டார்
    • முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் (வயது 42) . இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டம், கடியாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் மனைவி ராதிகா (28), அதே நிறுவனத்தை சேர்ந்த முகவர் தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சிவா, குமார், பிரபாகரன் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 11 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தி கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை கடந்த 23ம்தேதி அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகியிருந்த முகவர் தர்மலிங்கத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×