search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதனகோபாலசுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
    X

    மதனகோபாலசுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்

    • கடந்த 24ம்தேதிமுகூர்த்தகால் நடும் விழாவுடன் தொடங்கி தேரோட்டம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந் தேதி முகூர்த்தகால் நடும் விழாவுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 28 - ந் தேதி வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அரங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கடந்த 3- ந் தேதி நடந்தது.நேற்று (5ம்தேதி) பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடந்தது. பிரபாகரன் எம்.எல்.எ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் கோயில் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று இரவு நிலை நின்றது. அலங்கரிக்கப்பட்டு தேரில் பூமாதேவி, ஸ்ரீதேவி சமேத ஸ்ரீமதனகோபாலசாமி அமர்ந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×