என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் நீரில் மூழ்க்கி சாவு
- ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் நீரில் மூழ்க்கி உயிரிழந்தார்
- அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயசு 35). இவர் அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்மசிஷ்டாக பணிபுரிந்து வந்தார். ஆயுத பூஜை விடுமுறையில் தனது சொந்த ஊரான அந்தூர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார்.
ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத பிதமாக நீரில் மூழ்க்கினார். இதனை பார்த்த பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், கதறி அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனை கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் இறந்த நிலையில் சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்