search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பேரளி பகுதியில் நாளை மின்தடை
    X

    பேரளி பகுதியில் நாளை மின்தடை

    • பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், க.எறையூர், நெடுவாசல், ஒதியம், பனங்கூர், குரும்பாபாளையம், அசூர், சித்தளி, பீல்வாடி, செங்குணம், கவுல்பாளையம், கல்பாடி, கீழப்புலியூர், சிறுகுடல், வாலிகண்டபுரம், அருமடல், கே.புதூர், எஸ்.குடிகாடு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×