search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×