search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சிறுவாச்சூர், எசனை பகுதிகளில்  நாளை மறு தினம் மின் தடை
    X

    சிறுவாச்சூர், எசனை பகுதிகளில் நாளை மறு தினம் மின் தடை

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • பராமரிப்பு பணி முடியும் வரை மின்தடை

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தில் வரும் 19-ந் தேதி ( வியாழக்கிழமை) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

    இதே போல் எசனை துணை மின்நிலையத்தில் வரும் 19-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×