search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
    X

    பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    • பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20 ம் தேதி நடைபெறும்
    • தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    பெரம்பலூர்:

    தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "வேலைவாய்ப்பு முகாம்"; பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை மட்டும் நடைபெற உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறு குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

    தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 20 ம் தேதி (வெள்ளிக்கிழமை) மட்டும் காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×