search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அகரம்சிகூர் அருகே குடியிருப்புவாசிகள் சாலை மறியல்
    X

    அகரம்சிகூர் அருகே குடியிருப்புவாசிகள் சாலை மறியல்

    • பொதுப்பாதையை தனிநபர் அடைப்பதாக கூறி அகரம்சிகூர் அருகே குடியிருப்புவாசிகள் சாலை மறியல்
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் காலனி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் இளையராஜா(வயது 30). இவர் தனதுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் பக்கத்தில் உள்ள காலி இடத்தின் வழியாக இவரது வீட்டின் பின் பகுதியில் சுமார் 8 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு சென்றுவர பொதுபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இளையராஜா வசிக்கும் வீடு அவருக்கு போதிய அளவில் இல்லை என்பதால் வீட்டை விரிவு படுத்துவதற்காக பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.வீட்டை விரிவுபடுத்தினால் 8 குடும்பத்தினர் வசித்து வரும் வீடுகளுக்கு சென்ற வர பாதை வசதி இருக்காது. இதன் காரணமாக அவர்கள் வடக்கலூர்-வேப்பூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×