என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
- ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது
- இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வ.கீரனூரை சேர்ந்தவர் மணி(வயது 82). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் குன்னம் போலீஸ்நிலையத்தில் மணி மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தர்ராஜன் ஆஜரானார்.இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று நீதிபதி முத்துகுமாரவேல் தீர்ப்பு கூறினார். அதில், மணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணியை போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்