search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    • முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் துறைமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகில் சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் ராஜா, ரமநாயகம், இணைசெயலாளர்கள் மணிவேல், ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10சதவீத ஆபத்து படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ் ்சாலைத்துறையிலேயே வாரிசு பணி வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் செய்து ரூ. 5 ஆயிரத்து 200 முதல் 20 ஆயிரத்து 200 வரையும், தர ஊதியம் ஒரு ஆயிரத்து 900 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.முன்னதாக மாவட்ட இணைசெயலாளர் மதியழகன் வரவேற்றார். முடிவில் உட்கோட்ட தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். தொடர்ந்து கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவினை முதல்வர், நெடுஞ்சாலைதுறை அமைச்சர், கண்காணிப்பு பொறியாளர், முதன்மை இயக்குநர், முதலமைச்சரின் செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோருக்கு தபால் அனுப்பினர்.

    Next Story
    ×