search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோர், மனவளர்ச்சி குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வேறு குறைபாடுகளை உடையோர்களுக்கான அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், யூ.டி.ஐ.டி. அட்டை பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கென பிரத்யேகமாக சிறப்பு மருத்துவமுகாம் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், முடநீக்கியல் வல்லுனர் ஜெயராமன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் இன்றும் (புதன்கிழமை), மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளையும் (வியாழக்கிழமை), பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வருகிற 18-ந் தேதியும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-ந் தேதியும், பாண்டகப்பாடி மானிய தொடக்கப்பள்ளியில் 23-ந்தேதியும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24-ந் தேதியும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ந்தேதியும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந்தேதியும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந்தேதியும் நடக்கிறது. மேலும் டிசம்பர் மாதத்திலும் சிறப்பு மருத்துவமுகாம்கள் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களது போட்டோ-6 மற்றும் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தங்கள் அருகாமையில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×