search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 10, 11-ம் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம்
    X

    பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 10, 11-ம் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம்

    • பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி 10, 11-ம் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தது
    • 400-க்கு மேல் 126 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

    பெரம்பலூர்,

    10 மற்றும் 11ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அதிக மார்க் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளது. 2023 ஏப்ரல் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் விக்னேஸ்வரன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் அஜய் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவர் சைலாஸ் 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும் அறிவியலில் 9 பேரும், கணிதத்தில் 7 பேரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 480-க்கு மேல் 11 மாணவர்களும், 450-க்கு மேல் 57 மாணவர்களும், 400-க்கு மேல் 126 மாணவர்களும் பெற்றுள்ளனர்.இதே போல் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவி காமலி 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி சுவேதா 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி ஹர்சினி 579 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

    இயற்பியலில் 3 பேரும், உயிரியியல் மற்றும் கணக்குபதிவியில் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 570 மதிப்பெண்களுக்கு மேல் 9 பேரும், 550 மார்க்கு மேல் 63 பேரும், 500க்கு மேல் 222 பேரும் பெற்றுள்ளனர்.அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளையும், உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன குழும தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×