search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    9 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    X

    9 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    • 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் 1-வது வார்டுக்கு உட்பட்ட எம்.பி.சி. காலனியை சேர்ந்தவர் மணி. இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் என்ஜினீயரிங் ஓர்க்ஸ் கடையில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா(வயது 19) என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் முடிந்தது. தற்போது சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.15 மணியளவில் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் வயிற்றில் இருந்த ஆண்குழந்தையும் இறந்து விட்டது.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சங்கீதாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகனும் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×