search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    • மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று (5-ந் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் கால யாக சாலை பூஜை கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கியது. 20- ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.3 ே காடி செலவில் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் கோயில் ராஜநிலை கதவுகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்க முலாம் பூசப்பட்டுளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 3 யாக சாலைகள் மொத்தம் 61 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதுற்று கடந்த மாதம் 27-ந் தேதி கோவிலில் யானை முகத்தான் வழிபாடு நடத்தி, இற அனுமதி பெற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 30-ந் தேதி யானை முகத்தான் வழிபாடு, செல்வ வழிபாடு, நவகோள்கள் வழிபாடு, பசு வழிபாடு நடத்தி இறை அனுமதியும், மறையோர் அனுமதியும் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து பூமி வழிபாடும், லட்சுமி வேள்வியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாகசாலை பூஜை கடந்த 2-ந் தேதி மாலை தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 மற்றும் 3 -ம் கால யாக சாலை ாபூஜைகளும், நேற்று (4-ந் தேதி) 4 மற்றும் 5-ம் கால யாக சா லை பூகைளும் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்குடமுழக்கு விழாவை முன்னிட்டு இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விமானம், ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றியும், மதுரகாளியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    Next Story
    ×