search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம்
    X

    ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம்

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம் நடைபெற்றது.
    • விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிப்பட்டம் திருவீதி உலா வந்த பின் கொடிமரத்திற்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பக்தி பரவசத்துடன் கொடியேற்றப்பட்டது. மேலும் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகளுக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×