search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலிப்பு நோய் ஏற்பட்ட விவசாயி சாவு
    X

    வலிப்பு நோய் ஏற்பட்ட விவசாயி சாவு

    • வலிப்பு நோய் ஏற்பட்ட விவசாயி உயிரிழந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை காட்டு கொட்டகையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66), விவசாயி. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். கடந்த 29-ந்தேதி பெரியசாமி அதே பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கட்டையில் அமர்ந்திருந்த போது திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில், தலையின் பின்பக்கம் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×