என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விவசாயிக்கு சாகும் வரை சிறை தண்டனை
- விவசாயிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது
- சிறுமி பாலியல் வழக்கில் தீர்ப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயதுள்ள விவசாயிக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் கிராமம், நடுத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன் (50). விவசாயியான இவர் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 30ம்தேதியன்று அதே கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து நடந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. தீர்ப்பை மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல் நேற்று வாசித்தார். அப்போதுள சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரவணனுக்கு இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து மருவத்தூர் போலீசார் சரவணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் கோர்ட்டில் குற்றவாளிக்கு முதன் முதலாக சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது இந்த வழக்கிற்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோர்ட் வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்