என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி
Byமாலை மலர்22 July 2022 8:52 AM GMT
- குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார்.
- துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்தபோது ஏற்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அத்தியூர் கிராமத்தில் உள்ள பரியேறும் குட்டையில் நேற்று காலை முதியவரின் உடல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், குட்டையில் பிணமாக மிதந்தவர் அத்தியூர் கக்கன்ஜி நகரை சேர்ந்த முத்து கருப்பன் (வயது 85) என்பது தெரிய வந்தது. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மாலை குளிப்பதற்காக பரியேறும் குட்டைக்கு சென்றார். அப்போது குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X