என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மகன் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு
- மகன் வீட்டிற்கு வந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்
- தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள தெரணி கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி மலர்கொடி (வயது 55). கணவர் இறந்துவிட்டதால் மலர்கொடி தனியாக வசித்து வந்தார். இவரது மகள் விஜயாவுக்கு திருமணமாக செட்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற மலர்கொடி செட்டிக்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை 2 மணிக்கு எழுந்து வெளியே சென்ற மலர்கொடி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மகள் விஜயா வெளியில் சென்று தேடிப்பார்த்தார். அப்போது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிணற்றின் அருகில் தாய் மலர்கொடியின் செருப்பு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பார்த்தபோது அங்கு இறந்த நிலையில் மலர்கொடி மீட்கப்பட்டார். அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்