search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலுாரில் பள்ளி சமையல் பாத்திரங்கள் திருட்டு
    X

    பெரம்பலுாரில் பள்ளி சமையல் பாத்திரங்கள் திருட்டு

    • பெரம்பலுாரில் பள்ளி சமையல் பாத்திரங்கள் திருட்டு போனது
    • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாத்திரம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியம், திருமாந்துறை கிராமத்தில் டி.ஈ.எல்.சி. மான்ய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 35- மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான சத்துணவு கூடம் உள்ளது. அங்கு இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக சிவசங்கரி (வயது 39 ) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி அன்று சமையலறையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

    சனி,ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் திங்கள் கிழமை நேற்று காலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது சமையலறை பூட்டு உடைக்கப்பட்டு சமையல் செய்யும் பெரிய பாத்திரங்கள் மற்றும் பொருட்கள். திருடு போய் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மங்களமேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாத்திரம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, வாடகை பாத்திரத்தில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×