search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுக்க 1.20 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுக்க 1.20 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

    • பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுக்க 1.20 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது
    • பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி போட்டு பயன்பெற கால்நடை வளர்ப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மூன்றாம் சுற்றாக கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையால், குழுக்கள் அமைக்கப்பெற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டம் வரும் 21 ந் தேதி வரை கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முழுவதும் இலவசமாக போடப்படுகிறது.இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுக்குட்டிகளுக்கும் மற்றும் கறவை மாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×