search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னம் அருகே வரத விகாஸ் பப்ளிக்   பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
    X

    குன்னம் அருகே வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    • வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்பட்டது
    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நாடகமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வரிசைப் பட்டி கிராமத்தில் உள்ள வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழா–விற்கு பள்ளியின் தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசு–கையில், ஏசு கிறிஸ்து–வின் பெருமையை–யும், கல்வி மற்றும் சுகாதாரத்தின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். சிறப்பு விருந்தி–னராக அரியலூர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை டோமினிக் சாவியோ கலந்துகொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் புனித தன்மையும், அவர் பிறந்த நோக்கத்தினையும் ஏசு பெருமான் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நாடகமும், கலை நிகழ்ச்சிகளும் நடை–பெற்றன. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவி ஆராதனா வரவேற்றார். முடிவில் பள்ளியில் முதல்வர் அருள் பிரபாகர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு–களை பள்ளி, கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜி.லில்லி செய்து இருந்தார்.


    Next Story
    ×