search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜெயங்கொண்டத்தில் விசிகவினர் பட்டாசு வெடித்து   கொண்டாட்டம்
    X

    ஜெயங்கொண்டத்தில் விசிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • ஜெயங்கொண்டத்தில் மாவட்ட செயலாளர் அறிவிப்பு விசிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

    ஜெயங்கொண்டம்,

    விடுதலை சிறுத்தை கட்சியில் சில மாதங்களாக மாவட்ட செயலாளர் தேர்வு செய்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காட்டாகரம். கிராமத்தைச் சேர்ந்த கதிர் வளவன் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக விசிக கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் பலூர் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×