search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பெரம்பலூரில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்ற பயிற்சி முகாம்
    X

    பெரம்பலூரில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்ற பயிற்சி முகாம்

    • பெரம்பலூரில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்ற பயிற்சி முகாம் நடைபெற்றது
    • பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்களை பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்

    பெரம்பலூர்:

    இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இளையோர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பங்கேற்றவர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். இதனை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் அரசுத்துறை அலுவலர்கள் கருத்துரைகளை வழங்கினர். முகாமில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு பொருட்களை இளையோர் மன்றத்திற்கும் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார். முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த நேரு யுவ கேந்திரா அலுவலகத்துடன் இணைத்துகொண்டு செயல்படுகின்ற மன்ற பொறுப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்ட இளையோர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். முன்னதாக அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். முடிவில் நேரு யுவ கேந்திராவின் கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.


    Next Story
    ×