என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விஷம் குடித்த வாலிபர் சாவு
- விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்.
- மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் பாலமுருகன்(வயது 20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஓசூரில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்த பாலமுருகன் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பாலமுருகன் வயலுக்கு சென்று அங்கிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று பாலமுருகனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வந்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்