search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் அருகேசினிமா துறை தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு நடைபெற்று உள்ளது
    • பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு ஏ.வி.ஆர். நகரில் வசித்து வந்தவர் செல்லதுரை (வயது 45). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து சென்னையில் வசித்து வருவதோடு, அங்கு சினிமா துறையில் செட் அமைப்பாளராக பணி புரிந்து வருகிறார்.இதனால் அவருடைய சொந்த வீட்டை அவரது தாய் பொன்னாமணி 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து பார்த்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் செல்லத்துரையின் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம், பக்கத்தினர் பொன்னாமணிக்கும், செல்லத்துரைக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து பொன்னாமணி வந்து பார்த்த போது செல்லத்துரையின் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்

    பெரம்பலூர்,

    மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டார். முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்கள், அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனா். உரிய ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் முகாமிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசுத்துறைகளின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சா் சிவசங்கர் பார்வையிட்டார். முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, ஒரு மாணவருக்கு ரூ.2.02 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக்கூடிய சர்க்கர நாற்காலிகளையும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும், முகாமிற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மஞ்சள் பைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்க கையேடுகளையும் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 16 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 401 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 33 ஆயிரத்து 918 மதிப்பிலான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். இதில் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. நிறைமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 20-ந்தேதி ஆண்டி குரும்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21-ந்தேதி சின்னவெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    • பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாமில் 13 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
    • சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர் மற்றும் ஏட்டு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நிலப்பிரச்சினை தொடர்பாக பெறப்பட்ட மொத்தம் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது செய்யப்பட்டார்
    • குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அசூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44), தொழிலாளி. இவரது மனைவி சுசியை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி முத்தழகன் (32) தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை தட்டி கேட்ட சிவக்குமாரை முத்தழகன் பிளேடால் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொபட்டில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்
    • விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை ஏ.வி.ஆர். நகர் அப்புசாமி 2-வது தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 53). இவருக்கு கல்யாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சசிக்குமார் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீன் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி இரவு நண்பர் மணிகண்டனை மொபட்டில் அழைத்து கொண்டு பெரம்பலூா் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் கல்யாண் நகர் அருகே உள்ள திருமண மண்டபம் எதிரே சென்றபோது அந்த வழியாக ஒருவர் சாலையின் குறுக்கே சென்றதால் சசிகுமார் மொபட்டில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக துறையூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகுமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும் என கலெக்டர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய கடன் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை செயல்படுத்தப்படும். இந்த அரிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் அருகே ஓடும் லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்தது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    பெரம்பலூர்,

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர்-செங்குணம் பிரிவு சாலை அருகே நேற்று காலை ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்க என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட டிரைவர் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினார். இதையடுத்து லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை கொண்டு, லாரியில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். பின்னர் தண்ணீரை ஊற்றி தீைய அணைக்க முயன்றனர். இதற்கிடையே பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்களமேடு பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • 30 மது பாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள முருக்கன்குடி கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர். மது விற்பவர்களை கைது செய்வதாக மங்களமேடு போலீசார் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் முருக்கன்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மளிகை கடையில் சுப்பிரமணியன்(வயது 50), எழும்பூர் செல்லும் சாலையில் காட்டு கொட்டகையில் தனகராஜ்(49) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது
    • பிரதமர் நிதியில் இருந்து தள்ளுவண்டிகள் நகராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய சாலையோர வியாபாரிகளுக்கு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பி.எம்.ஸ்வா நிதியில் தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராமர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் 10 பேருக்கும், பூக்கடை வியாபாரிகள் 3 பேருக்கும், டிபன் கடை வியாபாரிகள் 2 பேருக்கும் தள்ளுவண்டிகளை வழங்கினார். இதில் நகர்மன்ற கவுன்சிலர்கள், நகரமைப்பு ஆய்வாளர் மாணிக்க செல்வன், இளநிலை உதவியாளர் பார்த்திபன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் இந்தியன் ஸ்வச்லீக்-2023 2.0 திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி சார்பில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிடும் வகையில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல் குறித்தும், கழிவுநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது குறித்தும், பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
    • முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன், மாவட்ட அவை தலைவர் குணசீலன், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், ராணி, அந்தூர் ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார், சிவப்பிரகாசம், பேரூர் செயலாளர் செந்தில்குமார், வக்கீல்கள் கனகராஜ், ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • ஜெயங்கொண்டம் அருகே அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது
    • கார் கண்ணாடியை உடைத்து வெறிச்செயல்

    ஜெயங்கொண்டம், 

    பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன்.இவர் சீர்காழியில் நடைபெற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது காரில் புறப்பட்டார். காரை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார்.இந்த கார் ஜெயங்கொண்டம் வாரியாங் கோவில் பகுதியில் வந்த போது 2 வாலிபர்கள் அவரது காரை திடீரென வழிமறித்தனர். அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் மாவட்ட செயலாளரை சூழ்ந்து நின்று கொண்டு தகராறு செய்தனர்.பின்னர் அவரது கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். இதில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயனுக்கு முகம், கை,கால்களில் காயம் ஏற்பட்டது.பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.இதில் 2 வாலிபர்கள் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்தது தெரிய வந்தது.பின்னர் தப்பி ஓடிய இலையூர்மேலவழி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சிவா (வயது 24) என்பவரை கைது செய்தனர். ரோட்டு தெருவை சேர்ந்த பூபாலன் என்பவரை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் காரை வழிமறித்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருட்டுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி யை பறிமுதல் செய்து விசாரணை
    • ரகசிய தகவலின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்

    அகரம்சீகூர், செப்.15-

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூரில் உள்ள வெள்ளாற்று பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அகரம்சீகூர் வெள்ளாற்றில் லாரியில் மணல் ஏற்றி கொண்டிருப்பது தெரிந்தது. மணல் ஏற்றிக் கொண்டு இருந்தவரை பிடித்து விசாரித்த போது ஒகளுர் கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை யடுத்து மங்களமேடு காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து, மணல்

    திருட்டுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி யை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×