search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பைக் மோதி முதியவர் பலி
    X

    பைக் மோதி முதியவர் பலி

    • பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில்பைக் மோதி முதியவர் பலி
    • இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 75). இவர் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் கோவிலில் மதியம் அன்னதானம் சாப்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, அந்த வழியாக கடலூரை சேர்ந்த அவினேஷ்(வயது 75) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர் மீது பயங்கரமாக மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ரெங்கசாமி படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ரெங்கசாமி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ரெங்கசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×