search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச வீட்டு மனை பட்டாக்களை பதிவேற்றக்கோரி மனு
    X

    இலவச வீட்டு மனை பட்டாக்களை பதிவேற்றக்கோரி மனு

    • கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு, இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது.
    • பட்டாக்களை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யவில்லை.

    கிருஷ்ணகிரி,

    சூளகிரி துப்புகானப்பள்ளியை அடுத்த டி.குருபரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    துப்புகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சலகிரி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு தமிழக அரசு, இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது. ஆனால் அந்த பட்டாக்களை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யவில்லை. மேலும் எங்களுக்கு மயான வசதியும் இல்லாமல் அவதிப்படுகிறோம். இது குறித்து விசாரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×