search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 137 மையங்களில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியது
    X

    மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மாணவிகள்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 137 மையங்களில் பிளஸ்-1 தேர்வு தொடங்கியது

    • பிளஸ்-2 தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த அதே 73 மையங்களில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றது.
    • தேர்வை மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேர் எழுதினர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இன்று பிளஸ்-1 தேர்வையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    நேற்று பிளஸ்-2 தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த அதே 73 மையங்களில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றது. சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 12 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களிலும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 28 மையங்களிலும் இன்று தேர்வு நடைபெற்றது. இதுதவிர 4 மையங்கள் சிறைக்கைதிகள் உள்பட தனிதேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

    இன்று தொடக்கம்

    இந்த தேர்வை மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த 8,609 மாணவர்கள், 11 ஆயிரத்து 172 மாணவிகள் என மொத்தம் 19, 781 பேர் எழுதினர். இன்று தொடங்கும் இந்த தேர்வு வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது.

    தேர்வையொட்டி இன்று காலை 7 மணி முதல் 16 வாகனங்கள் மூலம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ள 69 மையங்களுக்கும் வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சில மையங்களில் தேர்வினை கலெக்டர் கார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் தேர்வு பணிக்காக மொத்தம் 1, 968 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதில் அறை கண்காணிப்பாளர்களாக 1,507 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 64 மையங்களில் இன்று தொடங்கிய பிளஸ்-1 தேர்வை 16,499 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்காக 1,322 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனித்தேர்வு மையங்களில் சிறை கைதிகள் உள்பட பலர் தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    Next Story
    ×