search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மத்திய ஜெயிலில் போக்சோ கைதி திடீர் சாவு
    X

    கோவை மத்திய ஜெயிலில் போக்சோ கைதி திடீர் சாவு

    • கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    திருப்பூர் அருகே ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது72). இவர் காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் கைதாகி கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 27-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

    அப்போது திடீரென ஜெயிலில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×