search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செங்கோட்டை நூலகத்தில் கவிதை போட்டி
    X

    செங்கோட்டை நூலகத்தில் கவிதை போட்டி

    • செங்கோட்டை நூலகத்தில் நடைபெற்ற கவிதை போட்டியில் 78 பேர் கலந்து கொண்டனர்.
    • நகராட்சி தலைவர் ராமலட்சுமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் நூலக வார விழா நிறைவு நாளில் கவிதை போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் 78 பேர் கலந்து கொண்டனர்.

    வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணை செய லாளர் செண்பக குற்றாலம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக நகராட்சி தலைவர் ராமலட்சுமி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்த்தி பேசினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×