என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
போதை பொருளை பயன்படுத்தினால் இளமையை இழக்க நேரிடும்-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு
- கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்றால், ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
- கடந்த சில வாரங்களாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளது. அந்த வகையில் இந்த கல்லூரியிலும் போதை பொருள் ஒழிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவை மாநகர போலீஸ் சார்பில் கல்லூரிகளுடன் இணைந்து, போதை பொருளின் தீமை குறித்து விளக்கமாக எடுத்து கூறி வருகிறோம்.
போதை என்பது எவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்கால சமுதாயத்தின் நலன் கருதி நாம் அனைவரும் தற்போது இது குறித்து பேசி வருகிறோம். இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
போதை பொருளாக இருந்தாலும் சரி, ரவுடியிசமாக இருந்தாலும் சரி போலீஸ் பார்த்து கொண்டு இருக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தும் போது, நமது இளமை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. எனவே நீங்களே இந்த பழக்கம் உங்களுக்கு தேவையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்றால், ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி கோவையில் கடந்த சில வாரங்களாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் ஆண்கள் தான் ரவுடி மற்றும் போதை பழக்கத்தில் இருந்தனர். தற்போது ஒரு சில பெண்களும் ரவுடியிசம் மற்றும் போதை பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் வருந்ததக்க கூடிய விஷயமாகும்.போதை மற்றும் ரவுடியிசம் என வந்துவிட்டால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரே நடவடிக்கை தான். அதில் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் சட்டம் தன் கடமையை செய்யும்.கோவையில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம். யார் யார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரமும் சேகரித்து வைத்துள்ளோம்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்