search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொள்ளாச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும்-சப்-கலெக்டரிடம் பா.ஜனதா மனு
    X

    பொள்ளாச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும்-சப்-கலெக்டரிடம் பா.ஜனதா மனு

    • தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக பொள்ளாச்சி உள்ளது.
    • தென்னை பொருட்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகின்றன.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி நகர பா.ஜ.கவினர் பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக பொள்ளாச்சி உள்ளது. இங்கிருந்து ஒவ்ெவாரு ஆண்டும் கோடிக்கணக்கான மதிப்பில் தென்னை பொருட்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகின்றன.

    வருவாய் கோட்டம், கல்வி மாவட்டம், நெடுஞ்சாலை உட்கோட்டம், மக்களவை, சட்டசபை என அனைத்துக்கும் தலைமையிடமாக பொள்ளாச்சி உள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் திருப்பூர் இருந்தது. தற்போது திருப்பூர் தனி மாவட்டமாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நீண்ட காலமாக பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    நிர்வாக காரணங்களுக்காகவும், மாவட்ட தலைநகருக்கும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிக்கும் அதிக தூரம் உள்ளது.

    மலைப்பகுதியான வால்பாறை அருகே உள்ள சோலையாறு பகுதியில் இருந்து கோவை கலெக்டர் அலுவலகம் சென்று வர, சுமார் 260 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை மற்றும் ஆனைமலை ஆகிய 4 வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், உடுமலை வட்டங்களை உள்ளடக்கி பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்க வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×