search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு திருவிழா
    X

    செஞ்சி மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு திருவிழா நடைபெற்ற காட்சி.

    செஞ்சி மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு திருவிழா

    • மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழகத்தினர் செய்திருந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி செட்டிப்பாளையம் குளக்கரையில் உள்ள மாரியம்மனுக்கு 35- ம் ஆண்டு ஆடிப்பூர பூப்பல்லக்கு பெருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் செஞ்சி அங்காளம்மன் கோவிலில் இருந்து அக்னி சட்டி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க 108 பால்குடம் ஊர்வலமும் வந்து மாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் அன்னதானமும் மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சிக்கோட்டை மலர் தொடு வியாபாரிகள் ஒற்றுமை கழகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×