search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் அறிவிப்பு!
    X

    வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் அறிவிப்பு!

    • 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
    • தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

    வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுநாள் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். மற்றும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்த வேண்டும்.

    துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×