search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் பகுதியில் நாளை மின்தடை

    • நல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 24-ந் தேதி அன்று துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 24-ந் தேதி அன்று இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முதலிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.ஈ.நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கே கவுண்டம்பாளையம், விஜயபுரம், மானூர், செவந்தாபாளையம், ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இதுபோல் நல்லூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளிலும், பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜி நகர், அய்யப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- ஆர்.கே.நகர் மற்றும் சிறுபூலுவபட்டி பகுதியில் நாளை 24-ந்தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சின்ன பொம்மநாயக்கம்பாளையம், பாரதிநகர், கஞ்சம்பாளையம், ரோஜா நகர், எம்.ஜி.ஆர்.நகர், ராதாநகர், நல்லாத்துப்பாளையம், தொட்டி மன்னரை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×