search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடத்துாா், ராமியணஅள்ளி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    கடத்துாா், ராமியணஅள்ளி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • கடத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளது.
    • நாளை( செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுாி மாவட்டம் கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ராமியண அள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளது.

    இதனால் ராமியணஅள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமியணஅள்ளி, சிந்தல் பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூத நத்தம் ஆகிய கிராமங்களுக்கும், மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும், ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்மட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தான்குளம், ராமாபுரம் ஆகிய கிராமங்களுக்கும்,மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும், கடத்தூர் துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் பெறும் சுங்கர அள்ளி ,ரேகட அள்ளி ,கடத்தூர், சில்லார அள்ளி,தேக்கல் நாயக்கனஅள்ளி, புது ரெட்டியூர், நல்ல குட்ல அள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, புளியம்பட்டி, கதிர் நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூர் லிங்கநாயக்கனஹள்ளி, மோட்டாங் குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் நாளை( செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கடத்துாா் செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×