என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அதியமான்கோட்டையில் மின் செயலி பாதுகாப்பு குறித்து களப்பணியாளர்களுக்கு செயல்முறை விளக்கம்
- தருமபுரி அருகே மின் செயலி பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
- பனியாளர்கள் பங்கேற்பு
மின்சார வாரியம் சார்பில், புதிதாக நிறுவப்பட்டுள்ள உன் பாதுகாப்பு உன் கையில், என்ற பாதுகாப்பு மின் செயலி குறித்து மின்வாரிய களப்பணியாளர்களுக்கான, நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சி, தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்ம் முன்பு நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு உதவி செயற்பொறியாளர் இந்திராணி தலைமை தாங்கி, உன் பாதுகாப்பு உன் கையில், என்ற பாதுகாப்பு மின் செயலி குறித்த செயல்பாடுகள் பற்றி, மின்வாரிய களப்பணியாளர்களிடம் நேரடியாக விளக்கமளித்தார்.
பின்னர் அவர் மின்தடை, மின் நீட்டிப்பு மற்றும் இதர பணிகளை மேற்கொள்ளும் போது, பணியாளர்கள் கவனத்துடன் இடுப்பு கயிறு, கையுறை அணிந்து பாதுகாப்புடன் பணி செய்யும் முறைகள் குறித்தும், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்தும், விரிவாக அவர் எடுத்து கூறினார். இதில் உதவி பொறியாளர்கள் பசுபதி, பாலமுரளி, ஸ்ரீதர் அமல்நாதன் உள்ளிட்ட அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்