என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கார்த்திகை தீபத்தையொட்டி பூக்களின் விலை திடீர் உயர்வு
- 600 ரூபாய்க்கு விற்ற சன்னமல்லி இன்று கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாமந்திப்பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் மாரண்ட ஹள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் விவசாயிகள் சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ சந்தையில் விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில், கோவை, திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு மட்டு மல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் தருமபுரி சந்தைக்கு வந்து மொத்தமாகவும், சில்லறை யாகவும் சாமந்திப் பூக்களை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை அதிகரிப்பால் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
பண்டிகை காலங்களில் வழக்கமாக பூக்கள் விலை உயரும். இது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. சாதாரண நாட்களை விட பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு இருக்கும். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பண்டிகை போன்ற காலங்களை எதிர்ப்பார்த்து காத்து கொண்டி ருப்பார்கள்.
அந்த வகையில் இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்களின் விலை இன்று அதிகரித்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ இன்று கிலோ 80 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
நேற்று வரை ஒரு கிலோ சன்னமல்லி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் குண்டுமல்லி 800 ரூபாய்க்கு நேற்று விற்பனையான நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கனகாம்பரம் நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் சம்பங்கி, ரோஸ், அரளி, செண்டுமல்லி ஆகிய பூக்களின் விலையும் நேற்றை விட இன்று விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்