search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்திற்கு வருகை தரும்   முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு
    X

    விழுப்புரத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தும் கலெக்டர் அலுவலமகம் மற்றும் சுற்றுலா மாளிகையை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதா, புகழேந்தி எம்.எல்.ஏ. உள்ளனர்

    விழுப்புரத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு

    • விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது
    • உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசி–னார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திற்கு நாளை (புதன்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடகூறியுள்ளார்.

    தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர்சிவா, மாநில ஆதிதிராவிர் நலக்குழு இணை செயலாளர் புஷ்ப–ராஜ், மாவட்ட துணை செயலாளர் முருகன், தயாளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.

    சிறப்பான வரவேற்பு

    அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளையும் (புதன்–கி–ழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மாவட்ட தி.மு.க. சார்பில் நகர எல்லை யான அய்யூர்அகரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும்.

    நகர தி.மு.க.வினர் விழுப்புரம் நான்கு முனை சாலை சிக்னல் பகுதியில் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். பெண்கள் இதில் திரளாக பங்கேற்கவேண்டும். அரசு நிகழ்ச்சி என்பதால் கூட்டத்தில் யாரும் பங்ேகற்க அனுமதி கிடையாது. காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுக்கும் அனுமதி கிடையாது. எனவே வரவேற்போடு உங்–கள் பணி முடிந்து விட்டது.

    மேலும் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிப்பதோடு, கட்சி பணிகளை சிறப்–க மேற்–கொள்ளவேண்–டும் என்றார். இதில் விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, மும்மர்த்தி, தெய்வசிகாமணி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன், வேம்பிவி, நகர மன்றதலைவர் சக்கரைதமிழ்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்–றி–யக்குழு தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் நகர செய–லாளர் ஜீவா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினக–ரன், மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், மாவட்ட வர்த்–தக அணி அமைப்–பா–ளர் கோல்டு வெங்–க–டே–சன், நக–ர–மன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, நகர இளைஞ–ணி அமைப்பாளர் மணிகண்டன் விழுப்புரம் நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×