search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தனியார் கல்லூரி பஸ் மரத்தில் மோதி விபத்து
    X

    புளிய மரத்தில் மோதி பஸ்ஸின் முன்பக்கம் உருக்குலைந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.

    தனியார் கல்லூரி பஸ் மரத்தில் மோதி விபத்து

    • 8 மாணவர்கள் காயம்
    • அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    கடத்தூர்,

    ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி பஸ் பாப்பிரெ ட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி யில் இருந்து சுகர் மில் வழியாக மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது.

    அப்பொ ழுது அம்மாபாளையம் ஜாலிகாடு பிரிவு ரோடு அருகில் பஸ் சென்ற பொழுது ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில்பஸ்ஸின் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்து வந்த 8 மாணவ மாணவியர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    இந்த பஸ்ஸை ஆலாபுரம் நடுவர் பகுதியைச் சேர்ந்த குமார் ஓட்டி வந்தார். இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து ஆ பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரம் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் குறைந்த அளவே பஸ்ஸின் பின்பகுதியில் அமர்ந்திருந்த நிலையில் முன் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத வகையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×